உயிர்வரை பாயும் நேசக் கதிரொளி நீ…!: உருக்கி கோர்த்தாய் உன் உயிரில் பார்ட் 2 (Tamil Edition)


Price: ₹350.00
(as of Dec 06, 2023 18:18:59 UTC – Details)



உயிர்வரை பாயும் நேசக்கதிரொளி நீ… கதை உருக்கி கோர்த்தாய் உன் உயிரில் கதையின் 2 பார்ட்..
நல்லுருத்திரன் – மிருளாணி,
சத்தியேந்திரன் – மென்முழியாள் பற்றிய கதை.
ஒருவன் மியூசிக் டைரெக்டர், இன்னொருவன் பட இயக்குனர்… இருவரின் காதலும் எப்படி கை கூடுகிறது எனபது தான் கதை. அதை என் பாணியில் அழுத்தமான காதலோடு, காமடியோடு சொல்லி இருக்கிறேன். படிக்கிறவர்கள் படிக்கலாம்… படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

டீசர்…

உருத்திரன் பெரிய வீட்டில் நுழையாமல் சிறிய வீட்டிற்கு வர இவளது கால்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தடுமாறியது. பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனின் பின்னோடு அவளும் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
வந்தவளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் அடுப்படிக்கு சென்று காபி போட,
“நான் போடட்டுமா?” என்று கேட்டாள் அவனின் பின்னாடி வந்து.
அவன் விலகிக் கொள்ள, முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவன் எடுத்து வைத்த பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க உருத்திரன் அவ்விடத்தை விட்டு விலகாமல், முந்தானையை இழுத்து சொருகிய இடத்தில் அவளது இடை நன்றாக தெரிய அவனது கண்கள் முழுவதும் அவ்விடத்திலே மையம் கொண்டு இருந்தது.
வழுக்கும் அவளது இடையை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு கைகளால் அவ்விடத்தைத் தொட்டுத் தடவி விட துடிக்க எதற்கு அடக்க வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ அவளின் இடையில் தன் முரட்டு கரத்தை வைத்து இலையை கசக்குவது போல கசக்கி விட திகைத்துப் போனாள்.
விழிகள் இரண்டும் தெரித்து விடும் போல அகல வரிந்தது அவளுக்கு. சட்டென்று பின்னால் திரும்பி அவனை பார்த்தாள் மிருளாணி. அவளது பார்வையைக் கண்டு கொள்ளாமல் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். வெற்று கழுத்தில் அவனது மீசை முடி உரச வயிற்றில் ஆயிரம் மின்னல் எழுந்தது…
அதோடு இன்னைக்கு உருதிரனிடம் தென்படும் அதித மாற்றம் அவளை நிலைக்குலைய செய்தது. மிருதன் அவளை வீட்டில் விடுமாறு சொன்ன பொழுது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே ஒத்துக் கொண்டது…!
இதையே இவளால் நம்ப முடியாமல் இருக்க இதோ இப்பொழுது மீண்டும் அவளை நாடி அவளை நெருக்கிக்கொண்டு இருக்கிறான்…! ஒரு நாளைக்கு மிருணாவும் எத்தனை முறை தான் மூச்சடைத்து நிற்பாள் பாவம்.
அவள் மீது இரக்கமே இல்லாமல் அவளை சுகமாக வைதைக்க எண்ணிவிட்டான் போலும்… கழுத்தில் உரசும் அவனது முகத்தை ஏற்க முடியாமல் கூசி சிலிர்த்துப் போனாள்.
—-
என்ன நடந்தது என்று அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் படி அவனுக்கு மனம் உந்தியது தான். ஆனால் அவள் இருக்கும் நிலையில் எதையும் கேட்க அவனால் முடியவில்லை.
முன் பக்கமாய் குனிந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். அவள் கண்மூடி நின்றாளே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவளது கன்னத்திலும் முத்தம் வைத்தான். அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. இன்னொரு கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் வைத்தான். அந்த அழுத்தத்தில் நான் உனக்கு இருக்கிறேன் என்று அவள் உணர்ந்தாளோ என்னவோ அது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு வழிந்தது.
அவளின் கண்ணீரை உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் எரிமலையின் சீற்றத்தை கொண்டான். ஆனால் அதை அவளுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவன் அவளை அழ விட்டான்.
அவனது முத்தம் ஒன்றே அவளை உடைக்கும் காரணியாக மாறி இருக்க எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உடைந்து சிதறினாள். அவளின் கண்ணீரை அவன் துடைக்கவே இல்லை. வழியும் நீரை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
முற்றும் முழுதாக அவளை அழவிட்டவன், ஆறுதலாக அவளை பற்றிக் கொண்டான். தன் நெஞ்சில் அவளை சாய்த்துக் கொண்டான். அது ஒன்றே போதுமானதாக இருந்தது மென்முழியாளுக்கு.
சிறிது நேரம் அப்படியே அதற்குள்ளே உழன்றவள் சிவந்த விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளின் விழிகளில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் அவனை வெட்டிப் போட,
“என்னடா…?” என்று கேட்டான் மனம் பொறுக்காமல்.
உதடு துடிக்க “என்கிட்டே என்னை தவிர வேறு எதுவும் இல்லை சத்தியா…” என்றாள் விரக்தியாக. அவன் பார்வை கூர்மையாக படிந்தது அவள் மீது.

ASIN ‏ : ‎ B0CNNRRPN8
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 880 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 324 pages

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top